Wednesday 26 October 2016

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

பொது சிவில் சட்டம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவே 
அமையும் என்பதை வழியுரித்தியும் நம் ஷரீயத் சட்டத்தை 
காத்திடவும் மேலும் திருமணம், தலாக், குலா, பஸ்க், குழந்தை 
வளர்ப்பு ,வாரிசு உரிமை போன்ற சட்டங்கள் நம்முடைய 
தனியார் சட்டம் வாயிலாக பெண்களுக்கு பாதுக்காப்பாகவே 
உள்ளது என்பதை வலியுறுத்தியும் ஆல் இந்தியா லா கமிஷனுக்கு 
நம்முடைய நிலைப்பாட்டை தெறிவிக்கும் முகமாக சமூதாய 
மக்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக 17-10-16 அன்று லால்பேட்டை ஜாமிஆ 
மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில், தமிழ் மாநில 
ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்,கடலூர் மாவட்ட 
அரசு காஜி ,கல்லூரியின் பேராசிரியர்கள்,நிர்வாகிகள் 
கையெழுத்து இட்டனர்.

No comments:

Post a Comment