லால்பேட்டையில்,செப்டம்படர் 13-09-2016 அன்று ஈதுல்
அல்ஹா எனும் தியாகத் திருநாள்,, வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இருந்து தக்பீர் முழக்கத்துடன்
ஜமாஅத்தார்கள் ஈத்கா பள்ளியை வந்தடைந்தனர்.
சரியாக 6.45 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா
சபையின் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார்
அரபுக்கல்லூரியின் பேராசிரியருமான,அல்லாமா ஷைகுல் ஹதீஸ்
மௌலானா முஹம்மது அப்துர் ரஹ்மான்
ஹழ்ரத் அவர்கள் சிறப்பு பயான் செய்தார்கள். ஜாமிஆ
மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா
நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் 7.00 மணிக்கு பெருநாள் தொழுகை
நடத்தி உலக மக்களுக்காக சிறப்பு துஆ செய்தார்கள்.
இதேபோல் எள்ளேரி, ரம்ஜான் தைக்கால், காட்டுமன்னார்கோவில்,
கொள்ளுமேடு, ஆயங்குடி, மானியம் ஆடூர், கந்தகுமரன்
உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள்
சிறப்பு தொழுகை நடைபெற்றது.
No comments:
Post a Comment