லால்பேட்டைநகர ஜமாஅத்துல் உலமா முஸ்லிம் ஜமாஅத்
நடத்திய ஷிர்க் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்,
26.01.2016 அன்று அசர் தொழுதபின் முதல் அமர்வு தொடங்கியது.
ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மௌலானா
மௌலவி காரி முஹம்மது ஹஜ்ரத் கிராஅத் ஓதினார்.
மௌலவி முஹம்மது அஸ்அத் வரவேற்றார். மௌலவி
எம்.ஒய். முஹம்மது அன்சாரி தொடக்க உரையாற்றினார்.
மௌலவி ஜாகிர்ஹுசைன் ஹஜ்ரத் அறிமுக உரையாற்றினார்.
ம ஃரிப் தொழுகை இடைவேளை விடப்பட்டது. தொழுகைக்கு
பின் மௌலானா மௌலவி, Jma முதல்வர் அரசு காஜி
நூருல்அமீன் ஹஜ்ரத் தலைமை ஏற்று உரையாற்றினார்.
தொடர்ந்து மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்
மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும்,
வேதாளை மஹ்மூது ரிபாயி ஹஜ்ரத் அவர்களும் உரையாற்றினர்.
இறுதியாக மௌலானா மௌலவி ஹாமித் பக்ரி ஹஜ்ரத்
சிறப்பான எழுச்சியுரையாற்றினார். மௌலவி
சலாஹுத்தீன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment