மலேசியாவில் நீண்ட காலம் பணியாற்றிய லால்பேட்டை,
மௌலானா மௌலவி மக்பூல் மன்பயீ ஹழ்ரத் அவர்கள்,
18-12-2016 அன்று வ ஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை
மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல் பிர்தௌஸ்'
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று
துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும்
அழகிய பொறுமையை தந்தருளவும்,
மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர்
பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன் !!!
மௌலானா மௌலவி மக்பூல் மன்பயீ
ஹழ்ரத் அவர்களைப்பற்றி
மலேசியாவில் நீண்ட காலம் பணியாற்றிய லால்பேட்டை,
மௌலானா மக்பூல் மன்பயீ அவர்கள் இறப்பு, அவர்கள்
பணி செய்த இடத்தில் பெரிய இழப்பாகும்.
காரணம் அவர்களின் சேவைகள்.மலேசியாவில் எந்த
ஆலிமும் செய்தது இல்லை என்று கூட சொல்லலாம்.
தமிழர் சீனர்கள் என பலபேர்களை இஸ்லாதில் சேர்த்து
பெரிய ஒரு அந்தஸ்து பெற்று நல்ல ஆலிம் என்ற அந்தஸ்தும்
பெற்று இன்று இறைவன் அழைப்பை ஏற்று நம்மை விட்டு
பிரிந்து சென்று விட்டார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு சுவார்கத்தை வாஜிபாக்கி
வைப்பானாக ஆமீன். அவர்கள் குடும்பத்தார்களுக்கு
பொருமையை கொடுத்து பரகத் செய்வானாக ஆமீன்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment