லால்பேட்டையில் 06-05-2016 அன்று அஸர் தொழுகைக்கு பின் புதுப்பள்ளி மஹல்லாவில் கட்டபட்டுள்ள புதிய மகளிர் மதரஸா திறப்பு விழா புதுப்பள்ளி முத்தவல்லி மற்றும் மஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் தலைமை வகித்தார். மௌலவி . எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார்.
அவ்வமயம் மௌலானா முஹம்மதுசாலி ஹழ்ரத் ,மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,மௌலானா வி.ஆர்.அப்துஸ்ஸமது , ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி நிர்வாகிகள் ,பேராசிரியர்கள் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் திறப்பு விழாவில் ஏராளமானர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மன்சூர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment