அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன் கோட்டையைச் சேரந்த,
மூத்த ஆலிம் மௌலானா மௌலவி முஹம்மது ஹூசைன்
ஹழ்ரத் அவர்கள் 11-05-2016 இன்று அதிகாலையில்,
தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய
வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால்
துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும்
அழகிய பொறுமையை தந்தருளவும் மன்பயீ ஆலிம்.
இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!
குறிப்பு: ஹழ்ரத் சிறந்த பேச்சாளராகவும் குடந்தைசோழபுரம்,
பண்டாரவாடை . அடியக்காமங்கலம்.தற்பொழுது திருச்சியில்
இமாமாக பணிபுரிந்து வந்தார்கள். ஹழ்ரத் அவர்கள் பணியாற்றிய இடங்களில் நல்ல மதிப்பை பெற்றவர்கள்.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்
அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
No comments:
Post a Comment