கொள்ளுமேட்டில் இயங்கி வரும் மதரஸா அன்வாருல் ஹூதா பெண்கள் மதரஸா 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (18-05-2015) அன்று கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியும்,லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வருமான மௌலானா அல்லாமா நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி தேர்வு பெற்ற மாணவிகளுக்கு முபல்லிகா
பட்டத்தை வழங்கினார்.
பட்டத்தை வழங்கினார்.
கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எம்.எஸ்.நிஸார் அஹமது ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார். கடலூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.சஃபியுல்லாஹ் ஹஜ்ரத் துவக்கவுரையாற்றினார்.

விருதாச்சலம் வட்டார ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஆர்.அப்துல் கனி இன்ஆமி ஹஜ்ரத், கொள்ளுமேடு மஸ்ஜிதுத் தக்வா பள்ளி இமாம் மௌலவி ஏ.ஹலீலுல்லா பையாஜி ஹஜ்ரத், கொள்ளுமேடு மதீனா பள்ளி இமாம் மௌலவி எம்.கே.இம்தாதுல்லாஹ் மன்பயீ ஹஜ்ரத் மற்றும் கொள்ளுமேடு வாழ் உலமா பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்.

மௌலவி ஏ.முஹம்மது உஸ்மான் மன்பயீ நன்றியுரையாற்றினார்.
பெண்களுக்கான சிறப்பு பயான்

முன்னதாக பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு (17-05-0215) அன்று இரவு பெண்களுக்கான சிறப்பு பயான் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி சுல்தான்பேட்டை இன்ஆமுல் உலூம் பெண்கள் மதரஸாவின் ஆசிரியர் எம்.ஐ.பரக்கத் நிஸா ஆலிமா சிறப்புரையாற்றினார்.இதில் ஏராளமான தாய்மார்களும்,இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment