கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் மாநில தேர்தல் குழு
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஷபியுள்ளாஹ்
ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.
அது சமயம் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தல் இன்ஷா அல்லாஹ் வருகிற 19-08-2014 செவ்வாய்கிழமை அன்று சேலத்தில் நடைபெறவுள்ளது.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான லால்பேட்டை
அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களையும்,
செயளாலர் பதவிக்கு தற்போதைய சிவகங்கை மாவட்ட தலைவர் முஹம்மது ரிழா பாகவி ஹழ்ரத் அவர்களையும், ,பொருளாளர் பதவிக்கு மதுரை ஒத்தக்கடை காசிம் ஹழ்ரத் அவர்களையும் தேர்ந்தெடுப்பது
என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., .
சமூகத்துக்கும், உலமாக்களுக்கும் பெருமை சேர்க்கிற, ஒற்றுமையை உண்டாக்குகிற வகையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பை ஒருங்கினைத்தல். மாநில தலைமையகம் அமைத்தல். அங்கு மதரஸாவை நிறுவுதல் என பல்வேறு திருப்பு முனையான சேவையை ஹஜ்ரத் அவர்கள் செய்ததை நினைவு கூறப்பட்டது. இன்ஷாஅல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் சீரிய நிர்வாகம் அமைய துஆ செய்யுங்கள்.
No comments:
Post a Comment