Wednesday, 12 March 2014

முதுவைக் கவிஞர் மௌலானா மௌலவி ஹாஜி ஏ.உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ மறைவு !!!



ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி முதுவைக் கவிஞர் மௌலானா மௌலவி ஹாஜி ஏ.உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ  ( வயது சுமார் 58 ) அவர்கள் 01.03.2014 சனிக்கிழமை இரவு சுமார் 
12 மணியளவில் முதுகுளத்தூரில் வஃபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் 1969 முதல் 1975 ஆம் ஆண்டு வரை ஓதினார்.  தமிழ் இலக்கியத்தில் 
மிகுந்த  ஆர்வம் கொண்டவர்.

மலேசியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த காலங்களில் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கி 
மார்க்க விழிப்புணர்வினை ஏற்படுத்தியவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் 
அழைப்பின் பேரில் துபை வருகை புரிந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

No comments:

Post a Comment