Tuesday 15 September 2015

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் மூத்த பேராசிரியர் மௌலானா P.S. அப்துல் அலி ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!


லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் மூத்த பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்லாமா P.S. அப்துல் அலி ஆலிம் பாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் 29.08.2015 சனிக்கிழமை மாலை வஃபாத்தானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்,மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

No comments:

Post a Comment