Saturday 30 May 2015

லால்பேட்டை அருகில் ஜவாமிவுல் ஹிகம் கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.


jh copy

ஜவாமிவுல் ஹிகம் கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
லால்பேட்டை அருகில் வடக்கு கொளக்குடி டாக்டர் ஜாகிர் உசேன் நகரில் மீலாதுன் நபி விழா, அல்-இஸ்லாஹ் பெண்கள் அரபுக் கல்லூரி 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் J.H. நர்சரி & பிரைமரி பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழா எனும் முப்பெரும் விழாவாக
ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை தலைவர் மவுலவி வி.எஸ்.அப்துல் அஜீஸ் ரஃபீகீஷாஹ் நூரி அவர்கள் தலைமையில் இன்று  நடைப்பெற்றது,
 லால்பேட்டை பேரூராச்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ், வடக்கு கொளக்குடி ஊராச்சி மன்ற தலைவர் கே.பாபுராஜன், வடக்கு கொளக்குடி நாட்டாமை முஹம்மது ஜெக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை உபதலைவர் எஸ்.ஜாபர் அலி வரவேற்று பேசினார் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவுலவி ஜாகிர் ஹூசைன் ஹள்ரத் சிறப்புரையாற்றினார்.

உதவு தொடக்க கல்வி அலுவலர் திருமதி சரஸ்வதி லட்சுமி. தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். இன் நிகழ்வில் லால்பேட்டை அனைத்து பள்ளி முத்தவல்லிகள் ஜமாஅத் நிர்வாகிகள் அனைத்து நர்சரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர்.  ஜே.ஹெஜ். கல்வி அறக்கட்டளை துனைச் செயலாளர் அப்துல் சமது நன்றி கூரினார்.

No comments:

Post a Comment