Thursday 12 February 2015

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய மாதாந்திர பெண்கள் சிறப்பு பயான்!!!


லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய மாதாந்திர பெண்கள் சிறப்பு பயான்,12-02-15 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில், லால்பேட்டை மெயின்ரோடு கவ்ஸரியா பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

மெயின்ரோடு பள்ளிவாசல் இமாம் மவ்லவி,ஹாபிழ் தௌஃபிக் அஹமது அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.

ஜாமியா மன்பவுல் அன்வார் பேராசிரியரும், நகர ஜமாத்துல் உலமா செயலாளர் மவ்லவி ஜாகிர் ஹுஸைன் ஹஜ்ரத் அவர்கள் 
துவக்க உறை நிகழ்தினரர்கள்.

பள்ளபட்டி மக்தூமியா அரபுக்கல்லூரிப் பேராசிரியர் வேடச்சந்தூர் 
மவ்லவி J.அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மெயின்ரோடு பள்ளி முத்தவல்லி ஹாஜி R.ஹஜ் முஹம்மது அவர்களும், மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.

தகவல் ;-
மௌலானா A.R.ஸலாஹுத்தீன் மன்பயீ ஹஜ்ரத்
( செயலாளர்,கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை )

No comments:

Post a Comment